மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுப்பூர், தௌபல் மற்றும் கிழக்கு இம்பால் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 4 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிஷ்னுப்பூரின் நம்போல் பகுதியைச் சேர்ந்த லைதொஜம் திலிப் சிங் (வயது 47) என்ற நபர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தக் கடத்தலில் ஈடுபட்ட யுனைட்டெட் லிபரேஷன் ஃப்ரொண்ட் எனும் அமைப்பைச் சேர்ந்த 2 பேரை நேற்று (ஏப்.4) கைது செய்த போலீஸார் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்து திலிப் சிங்கை பத்திரமாக மீட்டுள்ளனர்.