ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளைக் கிண்ற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி இன்று (டிச.25) மூன்றாவது நாளாக தொடர்கிறது.
கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தைச் சேர்ந்த சேத்துனா (வயது 3) என்ற பெண் குழந்தை, கடந்த திங்களன்று (டிச.23) சாருண்டு பகுதியிலுள்ள தனது தந்தைக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த 150 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு வரவழைக்கப்பட்ட மீட்புக்குழுவினர் தற்காலிக கருவிகளைக் கொண்டு குழந்தையை மீட்க முயற்சித்தனர். அதன் மூலம் வெறும் 30 அடி அளவிற்கு மட்டுமே குழந்தையை மேலே கொண்டுவர முடிந்தது.
இந்நிலையில் நேற்று (டிச.24) இரவோடு குழந்தையை மீட்கப் பயன்படுத்தப்பட்ட நான்கு தற்காலிக முறைகளும் தோல்வியடைந்ததினால், இயந்திரம் மூலம் தோண்டும் பணித் துவங்கியுள்ளது.