ராஷ்திரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் குமார் ஜா, மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு எழுப்பியிருந்த கேள்வியொன்றில், ‘உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் பொறுப்புகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம்’ குறித்த விவரங்களைக் கேட்டிருந்தார்.
இந்த நிலையில், மத்திய அரசு அளித்துள்ள பதிலில், உயர்நீதிமன்றங்களில் கடந்த 2018-முதல் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளில் மொத்தமுள்ள 715 பேரில் 164 பேர் மட்டுமே மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்தோராவர் என்பது தெளிவாகியுள்ளது. இந்த தரவுகள் மூலம் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பதவி வகிப்போரில் உயர்சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தோர் 77.06 சதவிகிதம் என்பது தெரிய வந்துள்ளது.