உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டில் 20,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் ஐரோப்பிய தளங்களில் நிலைநிறுத்தப்பட்டனர். தனது ராணுவத்தினை தற்போது அமெரிக்கா திரும்பப் பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் ஐரோப்பிய நட்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நேட்டோவின் அடுத்தக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வரும் நிலையில், மறுஆயுத வங்கியின் மூலம் அரசின் நிதியைப் பயன்படுத்தி தனியார் ராணுவ முதலீட்டைப் பெருக்கவும், ஐரோப்பிய ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.