தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி,
1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை; ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக மோகன் பாகவத் கூறிய கருத்து ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் கைப்பற்றிவிட்டன. தற்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக மட்டுமல்லாமல் இந்திய அரசுக்கு எதிராக நாம் போராடுவதாக ராகுல் குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் காந்தியின் இக்கருத்துக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,