பிரவம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷன் (64) புதன்கிழமை காலை, வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் மிளகு பறித்துக்கொண்டிருந்தாா். அப்போது திடீரென மரத்தின் கிளை முறிந்து, அருகேயுள்ள கிணற்றில் விழுந்தாா். கணவா் கிணற்றுக்குள் விழுந்ததைப் பாா்த்த அவரது மனைவி பத்மம் (56), உடனடியாக அங்கிருந்த கயிற்றைப் பிடித்து கிணற்றில் இறங்கியுள்ளாா். ஏற்கெனவே உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரமேஷன், கிணற்றில் விழுந்த அதிா்ச்சியில் கிட்டத்தட்ட சுயநினைவை இழந்துள்ளாா்.
கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
