சஞ்சய் ராய்க்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை போதுமானதாக இல்லை என நீதிபதி எம்.டி. ஷப்பர் ரஷிடி அமர்விடம் சிபிஐ கூறியுள்ளது.
இதையடுத்து சிபிஐ சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜ்தீப் மஜும்தார், குற்றவாளிக்கு தண்டனை போதுமானதாக இல்லை என்ற அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வழக்கை விசாரித்த சிபிஐ-க்கு உரிமை உண்டு என்றார். இதையடுத்து சிபிஐ மேல்முறையீட்டு மனுவிற் தாக்கல் செய்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும் சிபிஐ கூறியுள்ளது.
எனினும் சிபிஐ, மேற்குவங்க அரசு தாக்கல் செய்த இரு மேல்முறையீட்டு வழக்குகளும் வருகிற ஜன. 27 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.