களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் ரெட்டி, டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை விளாசினார். அவர் 176 பந்துகளில் 105 ரன்கள் (10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து களத்தில் உள்ளார்.
பரிசுத் தொகை அறிவிப்பு
இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணிக்காக சதம் விளாசியதுடன், டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்ததை அங்கீகரிக்கும் விதமாக நிதீஷ் குமார் ரெட்டிக்கு ஆந்திர கிரிக்கெட் வாரியம் ரூ.25 லட்சத்தை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.