சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார்?

Dinamani2f2025 01 172f6wq15xno2fgyzh9b9wkaardtk.jpg
Spread the love

கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த தொடரில் இதுவரை 752 ரன்கள் விளாசியுள்ளார். அவரது சராசரி 752 என நம்பமுடியாத விதமாக இருக்கிறது. இதுவரை 5 சதங்களும் விளாசியுள்ளார்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், இந்திய அணியில் நடுவரிசை ஆட்டக்காரர்கள் குவிந்து கிடக்கிறார்கள். குறிப்பாக, ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பிடிக்கும் போட்டியில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வேண்டுமானால் கருண் நாயர் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் காயத்திலிருந்து மீண்டு, பந்துவீச்சு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதனால், சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறுவதற்கு அவர் தயாராக இருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *