இதையும் படிக்க: வளர்ப்பு நாய்க்கு ரூ.5 லட்சம் செலவில் பிறந்தநாள் விழா! விடியோ வைரல்!
சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உள்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது .
இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திரு விழா’ கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் அதிக அளவில் கண்டுகளிக்கும் வண்ணம் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மின்னணு வீடியோ வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் – கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் – புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 13.1.2025 அன்று முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்த நிகழ்ச்சியையும், 14.1.2025 அன்றைய கலை நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் 15.1.2015 முதல் 17.1.2025 வரை மூன்று நாள்கள் நடைபெறும் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளை சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் – கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் – புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.