யோக நரசிம்மரையும் யோக ஆஞ்சநேயரையும் தரிசித்துவிட்டால், இதுவரை இருந்த தடைகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் போகும். காரியம் யாவும் வீரியமாகும். மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் அகலும். இழந்த பொருளை, பிரிந்த உறவை, பதவியை, கெளரவத்தைத் திரும்பப் பெறுவது உறுதி என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.
இந்த நிலையில், சோளிங்கர் வந்த நடிகர் ஜெயம் ரவி, பிரசித்தி பெற்ற யோக லட்சுமி நரசிம்ம பெருமாள் மலைக்கோவிலுக்கு படிகள் வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தார் .
பின்னர் ரோப் காரில் கீழே இறங்கி சிறிய மலை ஆஞ்சநேயர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது பொதுமக்கள் நடிகர் ஜெயம் ரவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.