தற்போது மேலும் மழை தொடர்ந்து வருவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதே போல், நாகை மாவட்டத்தில் 580 விசைப்படகுகள், 3,200 பைபர் படகுகள் உள்ளன. டிட்வா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என மீன் வளத்துறை அறிவித்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களும் கரை திரும்பி விட்டனர். இதிதொடர்ந்து, விசை மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். மறு அறிவிப்பு வந்த பிறகே கடலுக்கு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இங்கு புயல் வந்தடைந்தால் காற்று அதிகமாக இருக்கும் கடல் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுக்காப்பு ஏற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக செய்துள்ளது” என்றனர்.