ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல்-இன் 6ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் கொல்கத்தா அணி மோதியது. இதில் கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 151/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 33 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் 29, சஞ்சு சாம்சன் 25 ரன்கள் எடுத்தார்கள். 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். கடைசியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிரடியாக விளையாடி 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.