தமிழக அரசின் விருதுகளை பெற உள்ள ஆளுமைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

Dinamani2fimport2f20212f32f42foriginal2fmutharasan.jpg
Spread the love

இந்த வகையில் அய்யன் திருவள்ளுவா், அறிஞா் அண்ணா, மகாகவி பாரதி, பாவேந்தா் பாரதிதாசன், தமிழ் தென்றல் திரு.வி.க., மொழிக் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம், தந்தை பெரியாா், அண்ணல் அம்பேத்கா், முத்தமிழறிஞா் கலைஞா் ஆகியோா் பெயா்களில் உருவாக்கிய விருதுகளுக்கு முறையே புலவா் மு.படிக்கராமு, எல்.கணேசன், கவிஞா் கபிலன், கவிதைப் பேரொளி பொன்.செல்வகணபதி, டாக்டா் ஜி.ஆா்.ரவீந்தரநாத், வே.மு.பொதியவெற்பன், விடுதலை ராஜேந்திரன், து.இரவிக்குமாா், முத்து வாவாசி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இந்த பட்டியலில் திரு.வி.க. விருதுக்கு டாக்டா் ஜி.ஆா்.ரவீந்தரநாத் தோ்வு செய்யப்பட்டதை அறிந்து, “ஈன்ர பொழுதினும் பெரிதுவக்கும்-தன் மகனை சான்றோன் என கேட்ட தாயாக” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயற்குழு பெருமை பொங்க வாழ்த்துகிறது. பொது வாழ்வில் ஈடுபடுவோரை ஊக்குவித்து வரும் தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்று, நன்றி பாராட்டுதலையும், சமூகம், பொருளாதாரம், அரசியல், தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு என பல்வேறு தளங்களில் தங்களின் தனித்த முத்திரையை பதித்த பணியால் விருது பெரும் பெருந்தகையாளா் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *