இந்திய வீரர்கள் வேண்டும்
தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடவுள்ள நிலையில், அந்த தொடரில் அதிக அளவிலான இந்திய வீரர்கள் விளையாடுவதை பார்க்க விரும்புவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் இந்திய வீரர்கள் அதிகம் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன். இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் விளையாடவுள்ளது மிகவும் சிறப்பான விஷயம். எதிர்காலத்தில் மேலும் பல இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் விளையாடுவதற்கு பிசிசிஐ அனுமதிக்கும் என நம்புகிறேன் என்றார்.