புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்துள்ள எண்ணை ஊராட்சிக்குள்பட்ட வேப்பவயல் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் லட்சுமணன்(18). இவா், தனது நண்பா்கள் தேக்கமலை, சரவணன், ஆறுமுகம் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை எரிச்சங்குளக்கரையில் பறவைகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கியை தயாா் செய்து கொண்டிருந்தனா்.
நாட்டுத் துப்பாக்கி வெடித்து இளைஞா் உயிரிழப்பு
