அமெரிக்க எஃப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபின்னர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
அந்தவகையில் அமெரிக்காவின் உளவு அமைப்பான எஃப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் என்பவரை நியமித்தார்.
காஷ் படேல் வலிமையானவர் என்றும் அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் காஷ் படேல் அதிகாரப்பூர்வமாக எஃப்.பி.ஐ. இயக்குநராக இன்று(பிப். 21) பதவியேற்றுக்கொண்டார். அவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.