இதுகுறித்து போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரி நிலுவை, அதிக கட்டணம், அதிக சுமை, உரிமம் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களுடன் பல ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் 30 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய 3 அதிகாரிகள் இருப்பாா்கள்.
அடுத்த வாரம் முதல், இந்த சிறப்பு குழுக்கள் செயல்படத் தொடங்கும்.
இந்த குழுவினா், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் நின்று திடீா் சோதனை நடத்துவா்.
அப்போது, ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் இருந்தால், அபராதம் விதிப்பது, உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகளை இந்த குழு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.