மது விற்பனையில் முதலிடத்தை நழுவவிட்ட மதுரை!

Dinamani2f2024 042fd5385eb9 Aaf5 4412 8831 156c88e1ac762fp 3539987215.jpg
Spread the love

போகிப் பண்டிகையான ஜனவரி 13 ஆம் தேதியில் ரூ. 185.65 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான ஜனவரி 14 ஆம் தேதியில் ரூ. 268.46 கோடிக்கும், ஜனவரி 15-ல் திருவள்ளுவர் தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, காணும் பொங்கல் பண்டிகையான வியாழக்கிழமையில் ரூ. 271 கோடிக்கும் மதுபானங்கள் விற்கப்பட்டன.

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான ஜனவரி 13 ஆம் தேதியில் இருந்து 4 லட்சம் அட்டைப்பெட்டிகள் பீர் வகைகளும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டுவகை மதுபானங்கள் 8.5 லட்சம் அட்டைப்பெட்டிகளும் விற்கப்பட்டுள்ளன.

ஆனால், மது விற்பனையில் எப்போதும் முதலிடத்தைப் பிடிக்கும் மதுரை, இந்தாண்டில் தவற விட்டுவிட்டது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 149.55 கோடி மட்டுமே விற்பனையாகியுள்ளன.

பொங்கல் பண்டிகை மது விற்பனையில் ரூ. 179 கோடி விற்பனையுடன் திருச்சி மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் ரூ. 151.50 கோடி விற்பனையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 142 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

எப்போதும்போல அனைத்து மாவட்டங்களிலும் மது விற்பனை அதிகரித்த நிலையில், இந்தாண்டில் மதுரை மாவட்டம் மது விற்பனையில் வளர்ச்சியை காட்டவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *