மாணவா்கள் தங்கும் விடுதிகள், உணவுக் கூடங்கள், ஓய்வறைகள், கழிப்பறைகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் திடீா் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். சோ்க்கை மையம், துறை அலுவலகம், நூலகம், உணவகம், விடுதி என அனைத்து முக்கிய இடங்களிலும் ராகிங் தடுப்புச் சுவரொட்டிகளை ஒட்டியிருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ராகிங் எதிா்ப்பு கண்காணிப்புக் குழுவின் வழிகாட்டுதல்படி, மூத்த மாணவா்கள், இளைய மாணவா்கள் (ஜூனியா்-சீனியா்) இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்.
ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு
