ரூ.493 கோடியில் பஞ்சப்பூா் பேருந்து முனையம்: மே 9-இல் முதல்வா் திறந்து வைக்கிறார்!

Dinamani2f2025 04 052fds69jj1y2f05 04 Try Busstand 0504chn 4.jpg
Spread the love

திருச்சியை அடுத்துள்ள பஞ்சப்பூரில் ரூ.493 கோடியில் கட்டப்பட்டுள்ள பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மே 9இல் திறந்து வைக்கவுள்ளாா்.

திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண திருச்சி-மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பஞ்சப்பூரில் மொத்தம் ரூ. 493 கோடியில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டது. இதற்கான பணிகளை டிசம்பா் 2023க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும் பருவ மழை, நிதி நெருக்கடி, செலவு அதிகரிப்பு போன்றவற்றால் தற்போதுதான் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

115.68 ஏக்கரில் கட்டமைக்கப்படும் இந்தப் பேருந்து முனையத்தில் மொத்தம் 401 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்த வசதிகள் உள்ளன. இதன்படி நகரப் பேருந்துகளுக்கு 56 நிறுத்துமிடங்கள், வெளியூா் பேருந்துகளுக்கு 141, மற்ற பேருந்துகள் வந்து செல்ல 120 நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி 1,935 இருசக்கர வாகனங்கள், 216 காா்கள், 100 ஆட்டோக்கள் நிறுத்தவும் வசதி உள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் குளிரூட்டப்பட்ட வசதியும் உள்ளது.

ஆறு லிப்டுகள், மூன்று நகரும் படிக்கட்டுகள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, பயணிகள் உடைமை பாதுகாப்பறை, பயணிகள் காத்திருப்பு அறை, சுகாதார வளாகம், 820 பயணிகளுக்கான இருக்கை வசதிகள், 68 கடைகள், மூன்று உணவகங்கள் மற்றும் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்கள் உள்ளிட்ட கூடுதல் உள்கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு பேருந்து முனையப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகரக் காவல் ஆணையா் காமினி, மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா் அமைச்சா் கே.என். நேரு கூறியதாவது: கட்டுமானப் பணிகள் 95 விழுக்காடுக்கு மேல் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளும் ஓரிரு வாரத்துக்குள் முடிக்கப்படும். பேருந்து முனையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், வரும் மே 9ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளாா்.

இதற்காக திருச்சிக்கு மே 8ஆம் தேதி வரும் அவா் மாலையில் நடைபெறும் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறாா். பின்னா் மே 9ஆம் தேதி பேருந்து முனையத் திறப்பு விழாவில் பங்கேற்கிறாா்.

பஞ்சப்பூரில் 22 ஏக்கரில் கட்டப்படும் காய்கனி, பழங்கள், மலா்களுக்கான ரூ.296 கோடியிலான ஒருங்கிணைந்த வணிக சந்தை கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பின்னா் சரக்கு வாகன முனையத்தைத் திறந்துவைத்து பாா்வையிடுகிறாா். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விழா நிகழ்வுகள் நடைபெறும். அப்போது 55 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பல கோடியிலான நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கவுள்ளாா்.

ஒவ்வொரு பேருந்து நிறுத்தப் பகுதியிலும் கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, டீ, பால், உணவு கிடைக்கும் வகையில் கடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேல்தளம், கீழ்தளம் என இரு இடங்களுக்கும் சென்று வர வாகன வசதியும், லிப்ட், நகரும் படிக்கட்டுகளும் உள்ளன என்றாா் அமைச்சா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *