மேலும், இதேப்போல் அசாமின் கர்பி அங்லோங் மாவட்டத்தில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அண்டை மாநிலத்திலிருந்து வந்த வாகனத்தில் 9.11 கிலோ அளவிலான ஓப்பியம் மற்றும் 1,030 கிலோ அளவிலான மார்ஃபைன் எனும் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அந்த வாகனத்தில் வந்த 2 பேர் கைது செய்தனர். அவர்கள் கடத்தி வந்த போதை பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.