புது தில்லி: விமானப் படை மார்ஷல் ஜிதேந்திரா மிஸ்ரா இந்திய விமானப் படையின் மேற்கு மண்டல கட்டளைப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
முன்னதாக, இப்பதவியை வகித்து வந்த பங்கஜ் மோகன் சின்ஹா விமானப் படையில் தனது 39 ஆண்டுகால சேவையை நிறைவு செய்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை(டிச. 31) ஓய்வு பெற்றார். இதையடுத்து, லடாக் மற்றும் அதையொட்டியுள்ள வட இந்தியாவின் சில பகுதிகளில் வான் வழிப் பாதுகாப்பை உறுதி செய்யும் மேற்கு மண்டல கட்டளைப் பிரிவின் தளபதியாக ஜிதேந்திரா மிஸ்ரா புத்தாண்டு நாளான இன்று(ஜன. 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.