அடுத்து களமிறங்கிய சென்னை அணி பவர்- ப்ளே ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் திரட்டி அசத்தியது. இந்தநிலையில், 6 பௌண்டரிகள் விளாசிய ஷேக் ரஷீத் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதன்பின் சென்னையின் ரன் வேகம் கட்டுக்குள் வந்தது.
ஃபார்முக்கு திரும்புவார்கள் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிபாதி 9 ரன்களுக்கு(10 பந்துகளில்) நடையைக் கட்டினார்.) அடுத்து வந்த ஜடேஜா (7 ரன்கள்), தமிழக வீரர் விஜய் ஷங்கர்(9 ரன்கள்) ஆட்டமிழக்க தோனி களத்திற்கு வந்தார். அவருடன் துபே ஸ்ட்ரைக்கில் இருந்தார். அப்போது கடைசி 5 ஓவர்களில் சென்னை அணிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது.