இந்நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.4,249.90 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக 15,873 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் மூலம் சுமார் 14,230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரூ.3,679.36 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, போதைப் பொருள் கடத்தல் மற்றும் அதனை பதுக்கியது ஆகிய வழக்குகளில் அம்மாநிலத்தின் புணே மாவட்டம் முதலிடத்தில் உள்ளது குறுப்பிடத்தக்கது.