TTT: “அவர்கள் கண்கலங்கி வழியனுப்பியது இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது” – நடிகர் ஜீவா | TTT: “The sight of them seeing me off with tears in their eyes is still fresh in my memory,” – Actor Jiiva |

Spread the love

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற “பேலிமி’ படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜீவா,“நாங்கள் கடந்த 4, 5 மாதங்களாகக் குமிளியில் ஒரு குடும்பமாகத் தங்கி இந்தப் படத்தை எடுத்தோம். அங்கிருந்த மக்கள் எங்களுக்காகக் கிடா வெட்டிச் சாமி கும்பிட்டு, இந்தப் படம் ‘விஸ்வரூப வெற்றி’ அடையும் என்று வாழ்த்தினார்கள். படப்பிடிப்பு முடிந்து நாங்கள் கிளம்பும்போது, அவர்கள் கண்கலங்கி வழியனுப்பியது இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது. இந்த வெற்றிக்கு அந்த மக்களின் அன்பும் ஒரு முக்கியக் காரணம்.

ttt success meet: நடிகர் ஜீவா

ttt success meet: நடிகர் ஜீவா

இயக்குநர் நிதேஷ் சகாதேவ்தான் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ. ஒவ்வொரு நடிகரிடமிருந்தும் திறமையை வெளிக்கொண்டு வந்து, காட்சிகளை அவ்வப்போது மெருகேற்றினார். ஒரு நடிகராக எனக்குத் தமிழில் ஒரு பெரிய வெற்றியை இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் நிதேஷ் சாத்தியமாக்கியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *