இருப்பினும், 27 பேர் பரிதாபமாக பலியானதாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தத் தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி சௌதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்தப் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஜம்மு – காஷ்மீர் தாக்குதல்: அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!