சென்னை: சென்னை ராயப்பேட்டையில் தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது நஸ்ருதின் என்பவரை கடந்த ஜூலை மாதம் மீர்சாகிப்பேட்டை மார்கெட் அருகே தெருநாய் ஒன்று கடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.