தமிழகம் ஆன்மிகம் தழைத்தோங்கும் பூமி: நயினார் பெருமிதம் | Nainar Nagendran says tn is land where spirituality flourishes

1371104
Spread the love

சென்னை: ‘தமிழகம் என்​றுமே ஆன்​மிகம் தழைத்​தோங்​கும் புண்​ணி​யபூமி என்​பது மீண்​டுமொரு​முறை நிரூபண​மாகி​யுள்​ளது’ என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: ராஜேந்​திர சோழனின் வீர வரலாற்​றின் ஆயிர​மாவது வெற்றி விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக​வும், தூத்​துக்​குடி நவீன விமான நிலை​யம் உள்​ளிட்ட பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை தொடங்கி வைப்​ப​தற்​காக​வும் 2 நாள் அரசு​முறைப் பயண​மாக பிரதமர் மோடி 26-ம் தேதி இரவு தமிழகம் வந்​தார்.

தூத்​துக்​குடி விமான நிலைய வளாகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ரூ.4,900 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டப்​பணி​களைத் தொடங்கி வைத்​தார். தமிழகத்​தின் உட்​கட்​டமைப்பை வலுப்​படுத்​தி, லட்​சக்​கணக்​கான மக்​களுக்கு வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கித் தரும் வகை​யில் பல வளர்ச்​சித் திட்​டங்​களை வழங்​கிய மத்​திய அரசுக்கு எனது நெஞ்​சார்ந்த நன்​றி.

பண்​டைய பாரதத்​தின் பொருளா​தார வளர்ச்​சி​யில் பெரும்​பங்​களித்த நமது பாண்​டிய நாட்டு முத்​துக்​களின் பெருமை குறித்து தூத்துக்​குடி மண்​ணில் துல்​லிய​மாக விவரித்த பிரதமரின் வரலாற்று ஞானம் கண்டு அதிச​யித்​துப் போனேன். தமிழ் மொழி மீதும், தமிழர் பண்​பாடு, கலாச்​சா​ரம் மீதும், தமிழ் மன்​னர்​கள் மீதும் அளவற்ற நேசம் கொண்ட ஒரு பிரதமர் இந்​திய வரலாற்​றிலேயே நரேந்​திர மோடி ஒரு​வர்​தான் என்​ப​தற்கு இதை​விட வேறு என்ன சான்று வேண்​டும்.

கங்கை கொண்ட சோழபுரத்​தில் உள்ள பிரகதீஸ்​வரர் ஆலயத்​துக்கு வருகை தந்த முதல் இந்​தி​யப் பிரதமர் என்ற வரலாற்று சிறப்பை பெற்​றவர் மோடி. என்​ன​தான் நமது மாநிலத்தை நாத்​தி​கக் கரும்​புகை சூழ்ந்து நம் இயல்பை மறைக்க முயன்​றாலும், ‘தமிழகம் என்​றுமே ஆன்​மீகம் தழைத்​தோங்​கும் புண்​ணிய பூமி’ என்​பது மீண்​டும் ஒரு​முறை நிரூபிக்​கப்​பட்ட இந்​நிகழ்​வின் வெற்றி முழு​மை​யும் பிரதமரையே சா​ரும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *