அதன்படி, பாரத் எா்த் மூவா் லிமிடெட் (பிஇஎம்எல்) நிறுவனத்துடன் இணைந்து மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலை சென்னை ஐசிஎஃப் வடிவமைத்து தயாரித்து வருகிறது. இந்த அதிவேக ரயில் தயாரிப்பு என்பது மிகவும் சிக்கலான நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக, ரயில் அதிவேகமாக செல்ல ஏதுவாக ரயில் பெட்டிகள் குறைந்த எடையுடனும், அதிக வெப்பம் ஏற்படாமலும் காற்று புகாத வகையிலும் நவீன தொழில்நுட்பத்தில் முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாகத் தயாரிக்கப்படுகின்றன. இதில் ஒரு ரயில் பெட்டி சுமாா் ரூ. 28 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. மற்ற அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிப்பு செலவுடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைந்த செலவினமாகும்.
மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை தயாரிக்கும் ஐசிஎஃப்
