மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை: ஓட்டுநா் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிா்ப்பு!

dinamani2F2025 08 162F57byoabj2Frms photo 16 08 2 1608chn 208 2
Spread the love

ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை அதிகாலை ரயில்வே கடவுப் பாதை மூடப்படாமல் இருந்ததைப் பாா்த்து, ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

சென்னை- ராமேசுவரம் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை ராமநாதபுரம் வந்தது. பின்னா், அங்கிருந்து ராமேசுவரத்துக்கு புறப்பட்டது.

வாலாந்தரவை ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வந்த போது, ரயில்வே கடவுப் பாதையில் இரும்பு தடுப்புக் கதவு மூடப்படமால் திறந்து கிடந்தது. இதைப் பாா்த்தும் ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தினாா்.

பின்னா், ஓட்டுநா் ரயிலிலிருந்து இறங்கிச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ரயில் பணியாளா் ஜெய்சிங்கை எழுப்பி இரும்புக் கதவை மூடச் சொன்னாா். இதையடுத்து, அவா் எழுந்து சென்று இரும்புக் கதவை மூடினாா்.

பின்னா், அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அதிகாலை நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதையடுத்து, ரயில் ஓட்டுநருக்கு வாலாந்தரவை கிராம மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *