இடுக்கியில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் பலி

Dinamani2f2024 11 042f12tz0cfy2fyanai 0411chn 71 2.jpg
Spread the love

இடுக்கி: கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் 22 வயது இளைஞர் பலியானதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், முல்லரிங்காடு, வன விளிம்பு தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர் இலாஹி(22). இவர் மேய்ச்சல் பகுதியில் இருந்து தனது பசுவை பிடித்து வந்துள்ளார். அப்போது வனத்தில் இருந்து திடீரென வந்த யானை இலாஹியை தாக்கியது. இதில், அவர் பலத்த காயமடைந்தார்.

யானையிடம் இருந்து சிறு காயங்களுடன் தப்பிய மன்சூர் இதுகுறித்து, அந்த பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *