கீவ்: ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தனர்.
சுமி நகரில் குருத்தோலை ஞாயிறன்று தேவாலயத்துக்கு வழிபாட்டுக்கு சென்றோரைக் குறிவைத்து ரஷியாவிலிருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிரிழப்பு 31-ஆக உயர்ந்துள்ளது.