வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.66 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது அதிகபட்சமாக ரூ.85.50 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.72 ஐ தொட்ட நிலையில், முடிவில் 12 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக முடிந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் உயர்ந்து ரூ.85.80-ஆக இருந்தது. இது முந்தைய அமர்வில் அதாவது வெள்ளிக்கிழமை அன்று 58 காசுகள் உயர்ந்தது ரூ.86.10 ஆக முடிந்தது.
இதையும் படிக்க: தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!