பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!

Dinamani2f2025 01 312f0fn1h2yd2fgiow2u9xoaift0.jpg
Spread the love

பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்த நிலையில் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 39 ரன்கள்(7 பவுண்டரி, 1 சிக்ஸர்) சேர்த்து விக்கெட்டப் பறிகொடுத்தார். அவருக்குப் பின்னர் பில் சால்ட் 23 ரன்னில் பெவிலியன் திரும்ப, கேப்டன் ஜோஸ் பட்லர் 2 ரன்னில் வீழ்ந்தார்.

முந்தையப் போட்டிகளில் சரியாக விளையாட ஹாரி புரூக் இந்திய அணி பந்து வீச்சாளர்களை 2 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரி விளாசி திணறடித்தார். வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஹாரி புரூக் விக்கெட்டை இழக்க லிவிங்ஸ்டன் 9 ரன்களிலும் ஜேகப் பெத்தேல் 6 ரன்களிலும் கார்ஸ், ஆர்ச்சர் ரன் ஏதுமின்றி வெளியேறினர்.

முடிவில் 19.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணித் தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த 5 போட்டிகளை 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. மேலும், இந்திய அணி டி20 தொடரை சொந்த மண்ணில் 17 வது முறையாக வென்று புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.

இவ்விரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசிப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *