19 முக்கிய வழிபாட்டுத் தலங்களில் மதுவிலக்கு ஏப். 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பிரசித்திபெற்ற 19 வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்லாது, அம்மாநிலத்திள்ள ஓரிரு கிராம பஞ்சாயத்துகளிலும் ஏப். 1-ஆம் தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் பிரசித்திபெற்ற உஜ்ஜையினியிலும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது. எனினும், அங்குள்ள கால பைரவர் கோவிலில் மது படைக்கப்படும் நடைமுறை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.