பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் திராவிட மாடல் தோல்வி அடைந்துள்ளது. போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திருச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்னையில் தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் மரணங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை சீரழித்து வருகிறது.