அகமதாபாத் விமான விபத்து; விமானி தான் காரணமா?- வெளியான அதிர்ச்சி தகவல் | Ahmedabad plane crash: Was the pilot the cause? – Shocking information revealed.

Spread the love

இன்ஜினுக்கு எரிபொருள் செலுத்துவதற்கான சுவிட்ச்சை ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்றும் உள்நோக்கத்துடன் தான் விமானி இதனை செய்திருக்கிறார் என்றும் Corriere della Sera எனும் இத்தாலி செய்தித்தாள் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. எனினும் அந்த ஊடகம் யாரிடம் பேசி இந்த தகவலை பெற்றது என குறிப்பிடவில்லை.

மேலும் இந்த செய்தியின்படி, விசாரணை அதிகாரிகள் கடந்த ஜூன் 2025 விபத்து, என்ஜினுக்கான எரிபொருள் துண்டிப்பு, இயந்திர கோளாறால் ஏற்படவில்லை, வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலால் நிகழ்ந்தது என்று தீர்மானித்துள்ளனர். அதிகாரிகள் இப்போது தங்கள் இறுதி அறிக்கையை தயாரித்து வருகிறார்கள். விசாரணையில் உதவும் அமெரிக்க நிபுணர்கள் இந்த கண்டுபிடிப்புகளை, விசாரணையில் ஒரு பெரிய முன்னேற்றம் என்று விவரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சுமீத் சபர்வால்

சுமீத் சபர்வால்

ஆனால் இந்த விபத்துக்கு பைலட்டுகள் நேரடியாக காரணம் என இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை.

அந்த விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் உடன், உதவி விமானியான க்ளைவ் குந்தர் ஆகியோர் சேர்ந்து இயக்கியது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *