ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.44 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.657.72 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.550.65 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நிறுவனம் தற்போது 19.44 சதவீத நிகர லாப வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.11,708.54 கோடியாக உயா்ந்துள்ளது. இது, 2024 ஏப்ரல் – ஜூன் காலாண்டில் ரூ.10,696.8 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.