அஜித்பவார் கட்சி அமைச்சருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைதண்டனையை உறுதி செய்த கோர்ட்; பதவியை இழப்பாரா? | Court upholds 2-year jail sentence for Ajit Pawar’s party minister; will he lose his post?

Spread the love

மகாராஷ்டிராவில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் மாணிக்ராவ் கோடே. துணை முதல்வர் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த 1995ம் ஆண்டு பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் என்று பொய்யாகக் கூறி அரசிடமிருந்து வீடு வாங்கினார்.

இது தொடர்பாக மாணிக்ராவ் மற்றும் அவரது சகோதரர் விஜய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் மாணிக்ராவிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதோடு உடனே ஜாமீனும் வழங்கியது.

இத்தண்டனையை எதிர்த்து மாணிக்ராவும், அவரது சகோதரரும் சேர்ந்து நாசிக் செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்

நீதிமன்றம்

அதேசமயம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டைத் திரும்ப பெற வேண்டாம் என்று அரசின் வீட்டு வசதி வாரியமான சிட்கோவிடம் கோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம் இவ்வழக்கில் ஜாமீன் கொடுக்கவில்லை. இதனால் உயர் நீதிமன்றத்தில் மாணிக்ராவ் கோடே ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *