2014ம் ஆண்டு ‘அஞ்சான்’ ரிலீஸ் ஆனபோது எல்லாரும் கடுமையாக விமர்சனம் பண்ணாங்க. அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் ‘அஞ்சான்’.
நானும் 100 சதவீதம் சரியான படம் பண்ணல. நிறைய தப்பு பண்ணிருக்கேன் அந்தப் படத்துல. அதனால எனக்கு வந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டேன்.
ஆனால், நான் பண்ண தப்ப பலமடங்காக ஊதி பெருசாக்கி திட்டுனாங்க. அன்னைக்கு எனக்கு ஆதரவாகப் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபுவையும் திட்டுனாங்க.

அன்னைக்கு எனக்கு நடந்தது என்று வருத்தப்பட்டேன். ஆனால், இன்னைக்கும் என்னைப்போல பல இயக்குநர்கள் போலியான விமர்சனங்களால பாதிக்கப்படுகிறார்கள். நெகட்டிவிட்டி அதிகமாகிடுச்சு. தனிப்பட்டு ஒருவரை காலி செய்ய வேண்டும் என்றே சிலர் வேலை பார்க்கிறார்கள். அது சினிமாவுக்கே ஆபத்து.
நல்ல விமர்சகர்கள், பார்வையாளர்கள் கிட்ட இருந்து வந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டு அதையெல்லாம் சரி பண்ணி இப்போ ரீ-எடிட் செய்து ‘அஞ்சான்’ படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறேன்.
ஏற்கனவே இந்தப் படத்துக்கு வந்த நிறைய கடுமையான விமர்சனங்கள பார்த்துட்டேன். புதுசா என்னை திட்டுறதுக்கு ஏதுமில்லை. அதுனால வெற்றி – தோல்வி விமர்சனங்கள் பற்றி பயமில்லாமல் ‘அஞ்சான்’ படத்தை நவ.28ம் தேதி வெள்ளிக்கிழமை’ ரீ-ரிலீஸ் செய்கிறேன்” என்று பேசியிருக்கிறார் லிங்குசாமி.