இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது.
20 போட்டிகளுக்குப் பிறகு டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கைத் தேர்வுசெய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் திலக் வர்மா உள்ளே வந்தார்.
தென்னாப்பிரிக்காவில் இரண்டு மாற்றங்களாக நந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஸி ஆகியோருக்குப் பதில் ரியான் ரிக்கல்டன், ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

பின்னர் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் குயின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் இன்னிங்ஸைத் தொடங்கினர். முதல் போட்டியில் டக் அவுட் ஆன ரிக்கல்டன் இப்போட்டியில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
ஆனால், முதல் இரு போட்டிகளில் 0, 8 ரன்கள் என ஏமாற்றமளித்த டி காக், இப்போட்டியில் அப்படியே அதற்கு நேர்மாறாக ஆடத் தொடங்கினார்.
கேப்டன் டெம்பா பவுமா சப்போர்ட் இன்னிங்ஸ் ஆட மறுமுனையில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் கடந்தார் டி காக்.