சாம்பார் + கோதுமை மாவு – செஃப் பாருவின் புதுமையான மெனு
தமிழ் டீச்சர் கனியம்மாவிற்கு திருக்குறளை விட்டால் வேறு தெரியாது போலிருக்கிறது. அதை வைத்து இன்றும் வகுப்பை ஓட்ட, ரஜினி மற்றும் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் திருக்குறள்களை கம்ருதீன் சொன்னது ரசிக்க்கத்தக்கதாக இருந்தது. அவர் வீட்டுக்குள் இருந்த இத்தனை நாட்களில், ரசிக்கத்தக்க அளவில் செய்த ஒரே விஷயம் இதுதான்.
வியானாவின் உடையை நீச்சல் குளத்தில் போடுவது போல விளையாடிக் கொண்டிருந்தார் விக்ரம். பதிலுக்கு விக்ரமின் பேன்ட்டை நீரில் போட்டு ஆட்டினார் வியானா. மைக் நனைந்து விடக்கூடாது என்று பிக் பாஸிற்கு கூட அத்தனை அக்கறை இருக்காது போல. வியானாவின் மைக் நனையாமல் இருக்க மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார் வினோத்.
ஒரு கட்டத்தில் வியானாவை நீச்சல் குளத்தில் விக்ரம் தள்ளி விட, உள்ளே இருந்த எஃப்ஜேவிற்கு ஆட்டோமேட்டிக் ரொமான்ஸ் அலாரம் அடித்தது. “ஏம்ப்பா.. போட்டுக்க வேற நைட் டிரஸ் கூட இருக்காது. ஏன் தண்ணில தள்ளினே?” என்று விக்ரமிடம் ஹீரோ போல பாய்ந்து வந்து எஃப்ஜே கேட்க “எல்லாம் ஒரு கன்டென்ட்தான். போய்யா” என்பது மாதிரி சென்றார் விக்ரம். “நீ எனக்காக பேசியது கேரக்டருக்காகவா, இல்ல உண்மையாவா? என்று பிறகு எஃப்ஜேவிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் வியானா. (பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுவதில் பெண்கள் கில்லாடிகள்!)
கிச்சன் ஏரியாவில் பாருவின் அலப்பறை கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது. சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிட்டதால் அமித்தின் யோசனைப்படி கோதுமை மாவை எடுத்து கொட்டிக்கொண்டிருந்தார். அவர் கொட்டிய மாவில் இருந்து ஒரு ஊருக்கே சப்பாத்தி செய்திருக்கலாம். சாம்பாரும் கோதுமை மாவும் கலந்த வஸ்துவைப் பார்க்க நமக்கே குமட்டிக்கொண்டு வந்தது. இந்த லட்சணத்தில் “கிண்டறதுல நாம எக்ஸ்பர்ட் ஆச்சே?” என்று தனக்குத் தானே சான்றிதழ் தந்து கொண்டார் பாரு.
‘சாம்பார்ல கோதுமை மாவா, இல்ல கோதுமை மாவுல சாம்பார் இருக்கா?” என்று திவ்யாவும் சாண்ட்ராவும் பிறகு கிண்டலடித்துக் கொண்டே சாப்பிட்டார்கள்.
பாருவை கிச்சன் ஏரியாவில் தவிக்கவிட்டதில் நடந்த ஒரே நல்ல விஷயம், வீடு அதிகம் சண்டை இல்லாமல் அமைதியாக இருந்தது மட்டும்தான்.