அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

Dinamani2fimport2f20212f92f252foriginal2ftvl18rain10609141.jpg
Spread the love

தமிழகத்தில் இன்று(ஆக. 20) இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,

தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம், உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *