அடையாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் திட்டப் பணி | 1500 crore project to rehabilitate Adyar

Spread the love

சென்னை: அடை​யாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செல​வில் திட்​டப் பணி​கள் நடை​பெற்று வரு​வ​தாக, அமைச்​சர் மா.சுப்பிரமணியன் தெரி​வித்​தார். வடகிழக்​குப் பரு​வ​மழையை முன்​னிட்​டு, பெசன்ட் நகர், ஊர்​குப்​பம் பகு​தி​யில் உள்ள முகத்​து வாரப் பகு​தி​யில் மழைநீர் தங்​குதடை​யின்றி செல்​வதற்​காக மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள நடவடிக்​கைகள் குறித்​து, சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு, சென்​னை​யில் மிகப் பெரிய அளவில் வெள்ள பாதிப்​பு​களை தடுப்​ப​தற்​கும், பெரிய அளவி​லான பாதிப்​பு​களி​லிருந்து சென்​னையை காப்​ப​தற்​கும் ஏராள​மான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளது. சென்​னை​யின் குடிநீர் ஆதா​ர​மாக பூண்​டி, சோழ​வரம், செங்​குன்​றம், செம்​பரம்​பாக்​கம், கண்​ணன்​கோட்டை தேர்​வாய் கண்​டிகை, வீராணம் ஆகிய ஏரி​கள் விளங்​கு​கிறது.

சென்​னை​யின் ஒட்​டுமொத்த நீர் ஆதா​ரத்​துக்கு 13,222 மில்​லியன் கன அடி நீர் தேக்கி வைத்​துக் கொள்​ளவதற்கு இந்த 6 ஏரி​களும் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. ஆனால், தற்​போது 10,028 மில்​லியன் கன அடி நீர் இருப்பு உள்​ளது.

அடை​யாற்​றைப் பொறுத்​தவரை இந்த அரசு பொறுப்​பேற்​ப​தற்கு முன்பு 25 ஆயிரம் கன அடி நீர் மட்​டுமே தாங்​கும். இதற்கு மேல் அதி​க​மாக நீர் வந்​தால் அடை​யாற்று ஓரம் உள்ள குடி​யிருப்பு பகு​தி​களுக்​குள் பாதிப்பு ஏற்​படும்.

அடை​யாற்றை சீர்​படுத்​து​வதற்​காக ரூ.1,500 கோடி செல​வில் மிகப்​பெரிய திட்​டம் செயல்​படுத்​தப்பட இருக்​கிறது. அடை​யாற்​றி​லிருந்து சைதாப்​பேட்டை வரை அடை​யாற்​றின் இரு வழிகளி​லும் கரைகள் எழுப்பி பலப்​படுத்தி சுற்​றுலா மைய​மாக மாற்​றப்பட உள்​ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *