அண்ணா பல்கலைக்கழகத்தின் டீன்கள், துறை தலைவர்களுக்கு அதிரடி சுற்றறிக்கை!

Dinamani2fimport2f20192f122f32foriginal2fannauniversity.jpg
Spread the love

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் டீன்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஞானசேகரன் (33) என்பரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உரிய நீதி வேண்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய குற்றவாளியை போலீஸாா் கைது செய்திருந்தும், அவரைக் காப்பாற்ற சிலா் முயற்சித்து வருவதாகவும்,பாலியல் வன்கொடுமையை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட ஞானசேகா் கூறிய சாா் யாா் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த சம்பவம் பெரும் தமிழகத்தில் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடா்பாக தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. இதன்படி, பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை செய்ய 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் அண்ணா பல்கலைக் கழகத்தில் பல்வேறு தரப்பில் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஞானசேகரன் வீட்டில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அந்த குழுவினர், ஞானசேகரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தது.

இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல்கலை. வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு நலன்கருதி, அண்ணா பல்கலைக்கழகத்தின் டீன்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில்,

வளாகத்தில் உள்ள அனைத்து தெருவிளக்குகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் முழுமையாக செயல்படுகின்றனவா என்பதை சரிபார்க்கவும்.

உதவி மேசை செயல்படுவதையும் மாணவர்களுக்கு உதவ போதுமான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்யவும்.

வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் பிற துறை சார்ந்த வசதிகளில் தேவைப்படும் மேம்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவிக்க, துறை தலைவர்களுடன் அவ்வப்போது சந்திப்புகளை நடத்துங்கள்.

உயர்தர உணவு வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, உணவகத்தை அவ்வப்போது ஆய்வு செய்யவும்.

கட்டுமானத் தொழிலாளர்கள் எந்த சூழ்நிலையிலும் வேலை நேரத்திற்குப் பிறகு வளாகத்தில் தங்குவதில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

வளாகத்திற்குள் வெளியாள்கள் வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கவும். அங்கீகரிக்கப்படாத வாகனங்கள் என்றால், கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையில் புகார் அளிக்கவும்.

நாள்தோறும் பாதுகாப்புப் பணியாளர்களால் உள்ளூர் ரோந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள், குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *