அதிகப்படியான bleeding… பொட்டுக்கடலை சாப்பிட்டால் உடனே நிற்குமா? | Excessive bleeding… will it stop immediately if I eat roasted gram

Spread the love

பீரியட்ஸ்  நின்ற பிறகும், அடுத்த 2-3 வாரங்களுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதைக் குடித்து வரலாம். இது கருப்பையைச் சுருங்கச் செய்ய உதவும். மெனோபாஸ் மற்றும் பெரிமெனோபாஸ் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய கட்டத்தில் இருப்போருக்கும் இது மிகச் சிறந்த மருந்தாக வேலை செய்யும்.

ஐந்து இதழ்கள் கொண்ட நாட்டுச் செம்பரத்தம் பூவும் இந்த நோய்க்கு மிகச்சிறந்த மருந்து. ஐந்து செம்பரத்தம் பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து (காம்பு மற்றும் மகரந்தம் நீக்கி), தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து கஷாயமாகத் தயாரிக்கவும். இந்த இளஞ்சிவப்பு நிற கஷாயத்தை, தொடர்ந்து 48 நாள்கள் குடித்து வந்தால், அதிகப்படியான ரத்தப்போக்கு முழுமையாகச் சரியாகும்.

பீரியட்ஸ் ரத்தம்

பீரியட்ஸ் ரத்தம்

ஆடாதொடை இலைகளும் இந்தப் பிரச்னைக்கான முக்கிய மருந்து.  3 முதல் 5 ஆடாதொடை இலைகளை நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். தினமும் 30 மில்லி சாற்றை இரண்டு வேளை வீதம் 5 நாள்களுக்கோ அல்லது ரத்தப்போக்கு நிற்கும் வரையிலோ குடிக்கலாம்.
சாறாக எடுக்க முடியாவிட்டால், இலைகளை விழுதாக அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வரலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *