“அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை”- ராஜகண்ணப்பனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி | manickam tagore slams rajakannappan

Spread the love

93 இடம் தான் கலைஞர் வைத்திருந்தார், ஆனால் அப்போது ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை. அப்புறம் எப்படி இப்போது கொடுக்க முடியும்.

150-ல் இருந்து 160 தொகுதியில் உதயசூரியன் ஜெயிக்கும். நீங்கள் பாருங்கள். 170 தொகுதியில் நிப்போம், 150 தொகுதியில் இருந்து 160 தொகுதி வரை ஜெயிப்போம். உதயசூரியன் ஜெயிக்கும்” என்று பேசியிருந்தார்.

மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர்

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” 2021-ல் 173 -ல் போட்டியிட்டு 133 வெற்றி.. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில் 40 இடங்களை கேட்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *