அதிக செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டதால் வானிலை தகவல் துல்லியமாக கிடைக்கிறது: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்  | More satellites launched, more accurate weather information available: ISRO

1380272
Spread the love

திருநெல்வேலி: அ​திக செயற்​கைகோள்​களை அனுப்பி உள்​ள​தால், வானிலை குறித்த தகவல்​களை மிகத் துல்​லிய​மாக, முன்​கூட்​டியே பெற முடிகிறது என்று இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்​ரோ) தலை​வர் நாராயணன் கூறி​னார்.

திருநெல்​வேலி மாவட்​டம் வடக்​கன்​குளத்​தில் உள்ள தனி​யார் கல்​லூரி நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற அவர், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​திய வானிலை ஆராய்ச்​சிக்கு அதிக அளவி​லான செயற்​கைகோள்​களை அனுப்பி இருக்​கிறோம். இதனால், வானிலை குறித்த தகவல்​களை மிகத் துல்​லிய​மாக, முன்​கூட்​டியே பெற முடிகிறது. மீனவர்​கள் கடலில் எல்​லையை கடக்​காமல் இருக்​க​வும், மீன்​கள் அதி​க​மாக உள்ள பகு​தி​களை அறிய​வும், ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இணைய செயலிகளை உரு​வாக்கி கொடுத்​துள்​ளோம். அதன் மூல​மாக தமிழிலேயே தகவல்​களைப் பெற முடி​யும்.

ககன்​யான் திட்​டத்​துக்​காக 80 ஆயிரம் சோதனை​கள் நடை​பெற்​றுள்​ளன. இத்​திட்​டத்​தில் முதலில் 3 ஆளில்லா ராக்​கெட்​களை விண்​ணுக்கு அனுப்பி சோதனை செய்த பின்​பே, ஆட்​களை விண்​ணுக்கு அனுப்​புவோம். அதற்​கான முதல் ராக்​கெட் இந்த ஆண்டு இறு​தி​யில் விண்​ணுக்கு செலுத்​தப்​படும். அடுத்த ஆண்டு 2 ராக்​கெட்​டு​கள் ஏவப்​படும். விண்​வெளி​யில் இருக்​கும் நபர்​களுக்கு ஏதாவது பிரச்​சினை ஏற்​பட்​டால், அதிலிருந்து தப்​பிக்க ‘க்ரூ எஸ்​கேப் சிஸ்​டம்’ என்ற பாது​காப்பு அமைப்பை வெற்​றிகர​மாக சோதித்​துள்​ளோம்.

உலக அளவில் விண்​வெளிக்கு ராக்​கெட்​களை வணி​கப் பயன்​பாட்​டுக்கு பயன்​படுத்​து​வ​தில் இந்​தியா 2 சதவீத பங்​களிப்பை கொண்​டுள்​ளது. இதை 10 சதவீத​மாக உயர்த்​தும் முயற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கிறோம். தற்​போது, 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கை கோள்​களை எடுத்து செல்​லும் ராக்​கெட்​களை வெற்​றிகர​மாக அனுப்பி உள்​ளோம். 40 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்​கைக்​கோளை அனுப்​புவதற்கு தேவை​யான ராக்​கெட்​டு​களை தயாரிக்க அனு​மதி கிடைத்​துள்​ளது. அந்​தப் பணி​யும் நடை​பெறுகிறது.ககன்​யான் திட்​டத்​துக்​கு, 80 ஆயிரம் கிலோ செயற்கை கொளை சுமந்து செல்​லும் ராக்​கெட் தயாரிக்க வேண்​டும். அதற்​கான முயற்​சிகளும் நடை​பெற்று வரு​கின்​றன. இவ்​வாறு நாராயணன் கூறி​னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *