சென்னை: சென்னையில் இன்று நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் நவ.20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமான திமுக அரசுக்கு எதிராக இன்று (நவ.17) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால், இந்த ஆர்ப்பாட்டம் நவ.20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்று காலை 10 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.